கொழும்பு: நானும், தந்தையும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என்று மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் நமல் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.