சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை மாநகர் மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்பி சம்பத், கருப்பண்ணன், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சங்ககிரி சுந்தர்ராஜன், ராஜமுத்து, பாலசுப்பிரமணியம், சித்ரா மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், உள்ளூர் மற்றும் வெளியூர் நிர்வாகிகளும் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.