×

தாம்பரம் காவல் ஆணையர் சரகத்தில் ஆரோக்கியமான உடலை பேணிகாக்க போலீசாருக்கு எடை பரிசோதனை: மருத்துவ ஆலோசனைக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையரகம் என்ற அடிப்படையில் தாம்பரம் காவல்துறை ஆணையரகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி உருவாக்கப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையராக கட்டுப்பட்டில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 16 போக்குவரத்து காவல் நிலையங்கள் என 36 காவல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு மற்றம் சைபர் க்ரைம் பிரிவுகளும் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் முதல் காவல் ஆணையராக டிஜிபி ரவி பணியாற்றி வருகிறார். இவர், தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசாருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், தாம்பரம் காவல் ஆணையரக சரகத்தில் உள்ள 36 காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு வாரமும் கட்டாயம் உடல் எடை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து காவல் நிலையங்களில் வாரந்தோறும் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் மருத்துவ உதவியாளர் எடை பரிசோதனை இயந்திரம் மூலம் அனைத்து காவலர்களும் எடை பரிசோதனை செய்து வருகின்றனர். மீண்டும் அடுத்த வாரம் எடை பரிசோதனை செய்யும் போது, முந்தைய வாரம் எடுத்த எடை அளவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது, எடை குறைந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனே அரசு மருத்துவர் ஆலோசனைக்கு அனுப்பப்படுகிறார்.

அதன்படி சம்பந்தப்பட்ட காவலருக்கு உடல் குறித்து பரிசோதனை செய்து எடை குறைவதற்கான காரணத்தை அறிந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று குரோம்பேட்டை காவல் நிலையம் போலீசார் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எடை பரிசோதனை செய்தனர். தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் கட்டாயம் அந்தந்த காவல் நிலையங்களில் எடை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் போலீசாரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Tambaram , Copper, Commissioner of Police, body, to police, weight
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...