சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என்று எஸ்டிபிஐ, விசிக, மமக கட்சிகள் அறிவித்துள்ளன. விழா வளாகம் முன் பீப் பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என கூறியுள்ளனர். ஆம்பூர் வர்த்தக மையத்தில் நாளை முதல் 15ம் தேதி வரை பிரியாணி திருவிழாவை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.