சிங்கப்பூர்: இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை பயணத்தை தவிர்க்க சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் மக்கள் பலர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.