சென்னை: இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1.3 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், திமுக கொறடா கோ.வி.செழியன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முதல்வரிடம் காசோலை அளித்தனர்.