கொழும்பு: இலங்கையில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவு, மக்கள் நம்பிக்கையை பெற்றவர் இந்த வாரத்துக்குள் பிரதமராக பொறுப்பேற்பார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசியல் சாசன பிரிவு 19 திருத்தப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படும் என அதிபர் தெரிவித்தார்.