பியோங்யாங்: வடகொரியா நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வடகொரியாவில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிக்காத சூழலில் தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கொரோனா தொற்று பாதிப்பால் வடகொரியாவின் அவசர நிலை பிரகடனம், எல்லையை கண்காணிக்க அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.