லிமஸால்: சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனை படைத்தார். ஆந்திராவை சேர்ந்த ஜோதி (22) பந்தயத் தொலைவை 13.23 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, 2002ல் அனுராதா பிஸ்வால் 13.38 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.