குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிய சரக்கு மலை ரயில் அடர்ந்த வனப்பகுதியில் வழியாக சென்று கொண்டிருந்தது. மரப்பாலம் மலைப்பாதையில் சென்றபோது திடீரென ரயில் இன்ஜினில் தீப்பிடித்தது. உடனே ரயிலை நிறுத்தி 3 தீயணைப்பு கருவியால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 3 ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.