×

சேர்த்துவைப்பதாக சத்தியம் செய்துவிட்டு நண்பரின் கள்ளக்காதலியுடன் தினமும் போனில் பேசிய டிரைவருக்கு வெட்டு: வாலிபர் கைது

அண்ணாநகர்: சேர்த்துவைப்பதாக கூறிவிட்டு தினமும் தனது கள்ளக்காதலியுடன் பேசிய டிரைவரை சரமாரியாக வெட்டிய நபரை கைது  செய்தனர். சென்னை நெற்குன்றம் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50). ராமு(எ) ராமச்சந்திரன்(34). இவர்கள் இருவரும் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கழிவுநீர் சுத்திகரிக்கும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றுகின்றனர்.  இந்தநிலையில், ராமச்சந்திரனுக்கும் 35 வயது பெண்ணுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண், ராமச்சந்திரனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணியன், கள்ளக்காதலியுடன் சேர்த்துவைப்பதாக ராமச்சந்திரனிடம் கூறிவிட்டு, இதன்பிறகு அந்த பெண்ணுடன் தினமும் சுப்பிரமணியன் பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ராமச்சந்திரன், ‘‘என் காதலியை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். இனிமேல் நீ தேவையில்லாமல் தலையிடாதே’ என்று கூறியதால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று ராமச்சந்திரன், சுப்பிரமணியன் வீட்டிற்கு  சென்று மது அருந்தலாம் வா என்று பைக்கில்   அழைத்துக்கொண்டு நெற்குன்றம் செல்லியம்மன் கோயில் பகுதியில் உள்ள காலி மைதானத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் ராமச்சந்திரன், சுப்பிரமணியனிடம்,‘‘என் கள்ளக் காதலியிடம் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன்’’ என்று மிரட்டியிருக்கிறார். இதற்கு சுப்பிரமணியன், ‘‘நான் அவருடன் பேசுவேன். முடிந்தால் உன்னால் என்ன செய்யமுடியுமோ  செய்துக்கொள்’’ என்று கூறியுள்ளார்.

இதில் கோபம் அடைந்த ராமச்சந்திரன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்பிரமணியனை அப்பகுதி மக்கள் மீட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர். ‘‘கள்ளக்காதலியிடம் சுப்பிரமணியன்  தினமும் செல்போனில் பேசியபோது அவரை பலமுறை எச்சரித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் கோபத்தில் சுப்பிரமணியனை வெட்டினேன்’’ என்று போலீசாரிடம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராமச்சந்திரனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Valipar , Promise to add, with a friend's fake girlfriend, to the driver, cut
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!