ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 275 ரகங்களில் 5.5 லட்சம் மலர் செடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரு ஆண்டுகளுக்கு பின் 124வது மலர்க்கண்காட்சி வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக 35 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு அவை பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை மாடங்களில் அலங்கரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.