×

கேளம்பாக்கம் ஊராட்சியில் பூங்கா சீரமைப்பு பணி துவக்கம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ள சாவடிகுளம், பல்வேறு குப்பைகளாலும், கழிவுகளாலும் சேதமடைந்து இருந்தது. இந்த குளத்தை சீரமைத்து பூங்கா மற்றும் நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து  கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் பங்களிப்புடன், சாவடிகுளத்தை தூர் வாரி பூங்கா மற்றும் நடைபாதை அமைப்பதற்கான தொடக்க விழா நடந்தது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன் குளம் சீரமைப்பு மற்றும் பூங்கா அமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

Tags : Kelambakkam , Commencement of park renovation work in Kalambakkam panchayat
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!