கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே தற்போது தங்கியிருக்கும் திரிகோணமலை கடற்படை தளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்சே, எம்.பி. பதவியையும் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யமாட்டார் என தெரிவித்தார்.