திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே ஆயுதங்களுக்கு வீடுகளின் பூட்டு உடைத்து பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த எக்லாசபுரம் கிராமத்தில் மனோர்மணியம் (72), சுந்தரமூர்த்தி(65) ஆகிய இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டில் உள்ள கதவு, பீரோவை உடைத்தும் கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது அவர்களுக்கு ₹5 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் அதற்கு அடுத்து இருந்த வீட்டின் உரிமையாளர்கள் மர்மநபர்கள் யாரோ இங்கும் அங்கும் செல்வதைக் கண்டு கூச்சலிட்டனர். இதை கேட்டு அங்கிருந்த தடியை எடுத்து ஓடி வந்தன. அப்போது, திருடர்கள் மிரட்டியபடியே தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இந்த இரண்டு வீடுகளில் கடந்த வருடமும் இதேநாளில், 5 சவரன் நகை மற்றும் ₹10ஆயிரம் திருட்டு போனது. நேற்று முன்தினம் இரவு வந்த கொள்ளையர்களை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ஆம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.