சென்னை: ஒன்றிய அரசின் உதய் திட்டத்துக்கு பிறகு டான்ஜெட்கோவின் கடன் 52% அதிகரித்துள்ளது. ரூ.81,312 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன், ஒன்றிய அரசின் ‘உதய்’ திட்டத்தில் இணைந்த பிறகு ரூ.1,23,895 கோடியாக அதிகரித்துள்ளது. உதய் திட்டத்தின் மூலம் டான்ஜெட்கோவுக்கு குறிப்பிடத்தக்க பயன்கள் ஏதும் ஏற்படவில்லை என தணிக்கை அறிக்கை தெரிவித்தது.