டெல்லி: இந்திய கடலோர காவல் படையின் சௌர்யா மற்றும் சாகர் ஆகிய ரோந்து படகுகள் வங்கக்கடலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. புயல் மையம் கொண்டுள்ள வங்கக்கடலின் வடமேற்கு பகுதியில் செல்லும் எண்ணெய் கப்பல்கள், மீன்பிடி படகுகள் கரை திரும்ப கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரோந்து கப்பல்களில் சென்று ஒலி பெருக்கிகள், சைரன்கள் மூலம் கப்பல்கள், மீன்பிடி படகுகளுக்கு புய அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.