×

வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றக் கோரி சுகேஷ் மனு: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டிடிவி.தினகரனுக்கு பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், தொழிலதிபர்கள் மனைவியிடம் ₹200 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டெல்லியில் உள்ள என் மீதான வழக்குகள் அனைத்தையும் கர்நாடகாவுக்கோ அல்லது வேறு மாநிலங்களுக்கோ மாற்றியமைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம்,‘இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags : Sukesh ,Union Government , Sukesh petitions to transfer case to another state: Notice to Union Government
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...