×

கோவை அருகே பரபரப்பு கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு-6 பேர் கைது

கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி அன்ட் டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா (23) என்பவர் தங்கியுள்ளார்.

இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜா, ஹரிகரன் (24), சத்தியபாலன்  (25), முத்துவேல்முருகன் (25) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சிவா தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். இரவு முழுவதும் மது அருந்தியும், கஞ்சா பயன்படுத்தியும் போதையில் கத்தியபடி இருந்தனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் அங்கு வந்தனர். தங்களை கண்டித்த சண்முகசுந்தரம், அவரது மனைவி பூர்ணிமா (21) ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான ஷ்யாம் என்பவரை துரத்தி துரத்தி வெட்டினர்.

போதையுடன் வீதியில் அரிவாளுடன் சுற்றிய அவர்கள் 5 பேரும் அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி, எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்த 4 பேரை தாக்கினர். அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியையும் (53) தாக்கியதுடன், அவரை அரிவாளால் வெட்ட துரத்தினர். அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டதால்  ஜன்னல் கண்ணாடிகள், போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார்  மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அங்கு வந்தனர்.  போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பித்து ஓடினர். பொதுமக்கள் துரத்தியதால் தென்னந்தோப்பு புதர்களுக்குள் பதுங்கினர். ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நான்கு புறமும் சுற்றி வளைத்து தேடினர்.
 
அருகில் சென்றவர்களை 5 பேரும் அரிவாளால் வெட்ட முற்பட்டனர். இறுதியில் பொதுமக்கள் 5 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அப்பாவிகளை போதையில் தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Tags : Goa ,Dharma , 6 youths arrested for handcuffing civilians under the influence of cannabis near Coimbatore: 6 arrested
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி