×

சென்னை அருகே 2 ரவுடிகள் வெட்டி கொலை: 5 பேர் அதிரடி கைது

சென்னை: மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (38), பிரபல ரவுடி. திருவெள்ளைவாயல் டாஸ்மாக் கடை அருகே ரவுடி மூர்த்தி கடந்த ஒருவாரமாக பார் நடத்தி வந்துள்ளார். நேற்று காலை பாரில் இருந்த மூர்த்தியை, 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூர்த்தி மீது 3 கொலை உள்பட 28 குற்றவழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொன்னேரி: பொன்னேரி அருகே வேண்பாக்கம், பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் (40), பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையங்களில் 2 கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில நாட்களுக்கு முன் வீட்டில் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் இவரது கூட்டாளி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஜவஹர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் ரவுடி ஜவஹர் சரமாரி வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தார்.திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தலைமையில் பொன்னேரி போலீசார் வந்து விசாரித்தனர். அதில், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மாவட்ட எஸ்பி தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து, பொன்னேரியை சேர்ந்த விஜய் (38), கார்த்திக் (22), ராஜவேலு (25), வசந்த் (22), சூர்யா (29) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Chennai , 2 rowdies hacked to death near Chennai: 5 arrested in action
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...