×

சொத்துவரி செலுத்திய 12 பேருக்கு பரிசுகள்: அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடியை அடுத்த அன்னம்பேடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் மக்கள் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டு கொரோனா காலகட்டத்தில் முறையாக சொத்து வரி செலுத்திருந்ததால் பரிசுகள் வழங்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் வி.சுனிதா பாஸ்கர் அறிவித்தார். இதன்படி, முறையாக வரி செலுத்திய 12 பேருக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு, எல்இடி டிவி ஒருவருக்கு பிரிட்ஜ் ஒருவருக்கு மிக்ஸி 5 பேருக்கு குக்கர் 5 பேருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, பூந்தமல்லி மேற்கு ஓன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜே.ரமேஷ், மா.ராஜி, ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், ஜி.சி.சி. கருணாநிதி, விமல் ரோஷன், ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சி.அண்ணாகுமார், இ.பிரதீப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Sathari ,Minister ,Sachtar ,b.k Nassar , Property tax, for 12 persons, Gifts, Nasser
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...