புதுக்கோட்டை: புதுக்கோட்டை அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டதால் 46 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் பிரியாணியை பரிசோதனை செய்ததில் ஸ்டபைலோ காக்கஸ்ஆவ்ரஸ் பாக்டீரியா இருப்பது உறுதியானது, உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் பாக்டீரியா கண்டறியப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரியாணியின் ஆய்வு முடிவை வைத்து உணவு பாதுகாப்புதுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட அதிகாரி பிரவின்குமார் தெரிவித்துள்ளார்