×

அண்ணாமலையின் ‘பல்லக்கு அரசியல்’ : பாலகிருஷ்ணன் கண்டனம்

கரூர்: பல்லக்கு தூக்குவேன் என்று தேவையின்றி அரசியல் செய்வதா என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தருமபுர ஆதினத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்த வழக்கம் பிற ஆதீனங்களில் தற்போது இல்லை. மனிதனை பல்லக்கில் உட்கார வைத்து அதை மனிதன் தூக்குவதை மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஆன்மீக விழாக்கள், இறை நம்பிக்கை, இறை உணர்வுக்கு எதிராக இல்லை.

இந்த விஷயத்தில் பாஜக தேவையின்றி அரசியல் செயல்கிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை நான் பல்லக்கு தூக்குவேன் என்கிறார். இது எந்த வகையான அரசியல். இது கண்டனத்துக்குரியது. பாஜக தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மூலப் பொருட்கள் விலையேற்றத்தால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜவுளித் தொழிலையும் குஜராத்திற்கு கொண்டு செல்வது என்பது ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது என்றார்.

Tags : Balakrishnan , Annamalai, Pallaku Politics, Balakrishnan
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...