டெல்லி: தேச துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தேச துரோக சட்டம் பற்றி மறு ஆய்வு தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்த நிலையில் திடிர் மாற்றமடைந்து தேச துரோக வழக்கு பதிவு செய்வதற்கான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124A மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தனது 75-வைத்து சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் நிலையில் காலனி ஆட்சி காலத்திய சட்டங்களை கைவிட காலனி ஆட்சி கால சட்டங்கள் தேவையில்லை என்பதால்தான் 2014-15-ல் 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது