×

டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த மேற்குதொடர்ச்சி மலை மற்றும் வனப்பகுதிகளில் மழையில்லாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை சுற்றுலா பயணிகள் வருகை குறைவானது. இதற்கிடையே, கடந்த சில வாரத்துக்கு முன்பிருந்து  வனப்பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால் வனப்பகுதி மீண்டும் இயற்கை அழகுடன் காணப்படுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதியில் ஒன்றான, டாப்சிலிப் வனபகுதி செழிப்புடன் பச்சை பசேல் என்று காணப்படுவதால்,  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. அதிகாலை நேரத்தில்  பனிபோல் மேக மூட்டம் காணப்படுவதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Topslip , Pollachi: Drought has hit the western hills and forests next to Pollachi due to lack of rain. Weil's impact
× RELATED டாப்சிலிப்பில் உலக யானைகள் தின கொண்டாட்டம்