புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.