சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வை 10 இடங்களில் வைத்து நடத்தலாமா என்று பரிசீலித்து வருகிறோம் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து, வரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.