×

தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் ஆர்டிஓ பாலாஜி உத்தரவிட்டு இருந்தார். இதுகுறித்து பல்வேறு ஆதீனங்கள் மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் மயிலாடுதுறை ஆர்டிஓ பாலாஜி விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘‘2022 மே 22ம் தேதி தருமபுர ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப்பிரவேசத்தின்போது ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட  வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் பல்லக்கை சுமப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தருமபுர ஆதீன மடத்தின் மேலாளர் வேண்டுகோளை ஏற்று ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமப்பதற்கு விதித்த தடை  நீக்கிக்கொள்ளப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Permission for Dharmapura Aadeenam Patna Entrance Program
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...