×

நாகை அருகே மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது

கீழ்வேளூர்: நாகை, கீழ்வேளூர் அருகே காருகுடி பள்ளியில் மது போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன்(58) தலைமையாசிரியராகவும், ஆசிரியராக தேவகி(47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் 2ம்  வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தாயார் விசாரித்ததில் தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்த நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து  தலைமையாசிரியரை கைது செய்தனர். இதையடுத்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் விசாரித்து, தலைமையாசிரியர் தமிழ்செல்வனை சஸ்பெண்ட்  செய்தார்.


Tags : Nagai , Sexual harassment of a drunken girl near Nagai: Editor arrested
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்