சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய பிரிவு மாநிலத் தலைவரை நியமித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய பிரிவின் மாநில தலைவராக பி.எஸ்.புத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேந்திரன் ஆலோசகராக செயல்படுவார். துணைத் தலைவர்களாக ஆலடி சங்கரய்யா, சிங்கை தர்மன் மற்றும் பொருளாளராக சொல்வேந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.