×

இடிதாக்கி 2 பசு மாடு பலி: தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது

சோளிங்கர்: சோளிங்கர் அருகே இடிதாக்கி 2 பசு மாடு பலியானது. மேலும் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. சோளிங்கர் அடுத்த கேசவனாங்குப்பம்  கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினமும் வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பினார். மாடுகளை வீட்டின் வெளியே இருந்த தொழுவத்தில் கட்டி வைத்தார்.

சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, முனியம்மாள் வீட்டின் அருகே இருந்த தென்னை மரம் மற்றும் 2 மாடுகள் மீது இடி, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. 2 மாடுகளும் சம்பவ  இடத்திலேயே  மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் முனியம்மாள் வீட்டில் இருந்த 2 மின்விசிறிகளும் பழுதடைந்தது. தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Tags : Thunder, cow slaughter, coconut tree,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...