×

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்; மேலும் 4 காவலர்கள் கைது : சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை சிபிசிஐடி நேற்று கைது செய்தது.

விக்னேஷ் இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை அடுத்து 2 காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்யப்பட்டனர். மெரினா காவல் நிலைய எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விக்னேஷ் மரண வழக்கில் எஸ்.ஐ. அனில், காவலர் செல்வகுமார் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vignaesh ,CPCID , Prisoner, Vignesh death, 4 guards, arrested
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...