×

திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடம்பாக்கம், பள்ளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (28). இவருக்கும், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (26) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் வழக்கம்போல் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் விஜயலட்சுமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி, படுக்கையறையில் தனது புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வரதட்சணை கொடுமையால் விஜயலட்சுமி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் திருமணமாகி ஒரே ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.




Tags : RTO , Teen commits suicide, one year of marriage, RTO investigation
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு