×

வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் நடவடிக்கை, இதுவரையிலான நீதிமன்றஆணையை நடைமுறைபடுத்தியது குறித்து நிலை அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை ஆற்றுப் பகுதியில் டன் கணக்கில் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசு அதிகரித்துள்ளதாக நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : Icord ,Vaigai River , Vaigai River, Waste, Activities, Report, Icord Branch,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...