சென்னை: அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பேப்பர் பைகளை உபயோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மாமன்ற உறுப்பினர்கள் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கு செல்லும் போது மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் செல்ல வேண்டும், மயானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என கூறினார்.