சென்னை: பணி தொடர்பான விவகாரத்தில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. நில அளவை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான அரசாணையை எதிர்த்து அளவையர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர். எவ்வித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என வழக்கு தொடரப்பட்டது.