கரூர்: கரூர் மாவட்டம் வெடிச்சிபாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியை கையகப்படுத்தி முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பல்வேறு விதிமீறல் புகார் அடிப்படையில் உதவிபெறும் பள்ளி கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நேரடி மானியம் பெறுவதாகவும் பள்ளியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.