சென்னை: சென்னையைச் சேர்ந்த 2 காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் கிரிப்டோ கரன்சியில் ரூ.1.5 கோடியை இழந்துள்ளனர். ஒரு காவலர் ரூ.1.24 கோடியும் மற்றொரு காவலர் ரூ.20.67 லட்சமும் கிரிப்டோவில் இழந்தது அம்பலமானது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அறிக்கையிட்டார்.