சென்னை: எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமனின் வாகன அடையாள அட்டையை போலியாக தயாரித்து பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அபுபக்கர், மொய்தீன் ஆகிய இருவர் எம்.எல்.ஏ.பரந்தாமனின் வாகன அடையாள அட்டையை போலியாக தயாரித்து பயன்படுத்திய போது வாகன சோதனையில் பிடிபட்டனர் இருவரையும் கைது செய்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.