சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.