சென்னை: சென்னையில் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் திட்டம் தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் திட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னையில் நடந்தது போல நம்ப ஊரு திருவிழா போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.