×

காஞ்சிபுரத்தில் சோகம் இடி தாக்கி பள்ளி மாணவன் பலி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் உள்பட சில மாவட்டங்களில் வெயில் வாட்டியது. நேற்று அக்னி நட்சத்திரம் துவங்கிய நேரத்தில், மாலையில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளிக் காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்நிலையில், அடுத்த வையாவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன் குமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். 2வது மகன் நந்தகுமார் (12) 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினான். அப்போது, திடீரென மழை பெய்தது. இதையடுத்து வயல்வெளிக்கு சென்று மாடுகளை ஓட்டி வருகிறேன் என கூறிவிட்டு சென்றான். பின்னர், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. மழை நின்றவுடன் பெற்றோர், வயல்வெளிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு, இடி தாக்கி நந்தகுமார் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனே, மகனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதை கேட்டு பெற்றோர், கதறி அழுதனர். புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Kanchipuram , Kanchipuram, thunder, school student killed
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...