×

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது, இவ்வாணையத்தில் மார்ச் 18ம் தேதி முதல் உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. மேலும் 6ம் தேதி முதல் உறுப்பினர் (சட்டம்) பதவியில் காலியிடம் ஏற்படவுள்ளது. இந்த இரு பதவிகளையும் நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29ம் தேதியன்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) ஆகிய பதவிகளை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16ம் தேதி மாலை 6 மணி வரை வரவேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் இணையதள முகவரி http://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Electricity Regulatory Commission , Application Welcome for the post of Member of the Electricity Regulatory Commission: Government Notice
× RELATED ஏற்கனவே உள்ள மின் கம்பத்திலிருந்து...