சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக அவரின் செயலாளர் தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.