×

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏப்.29, 30 ஆகிய 2 நாட்கள் விசாரித்த நிலையில் 3-ம் நாளாக தனிப்படையினர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே சசிகலா உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக 18 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் பூங்குன்றன்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த அ.தி.மு.க. நிர்வாகி சஜிவன் மற்றும் அவரது அண்ணனிடம் தனிப்படையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.



Tags : Kodanadu ,Jayalalithaa ,Poonkunran , Kodanadu, murder, robbery,. To Bloom, Inquiry
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...