×

திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தங்கமணியை கைது செய்த காவல்துறையினர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.


Tags : Thiruvannamalai ,Thangamani ,Chief Minister ,MK Stalin , Thiruvannamalai, trial prisoner, trial, Chief MK Stalin, CPCID
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...