ஆலந்தூர்: நந்தம்பாக்கம் ஐடிபிஎல் வளாகத்தில் பழுதடைந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டன.இங்கு குடியிருந்த 19க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டும், குடியிருப்பை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கே தங்கி இருந்தனர். இவர்களை அகற்றி, வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் 19 வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.