×

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் சசிகலா கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றிட வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, சசிகலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: தமிழக அரசு மருத்துவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை உடனே நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தமிழகம் மீள்வதற்கு மருத்துவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Sasikala , Sasikala demands increase in government doctors' salaries
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...