×

எழும்பூர் கோர்ட்டில் ‘சீல்’ திருடிய ஊழியர் கைது

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு நகலில் பொறிக்கப்படும் நீதிமன்ற முத்திரை (சீல்) திடீரென மாயமானது. இதுகுறித்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சைதாப்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் என்பவர், நீதிமன்ற முத்திரையை திருடி செல்லும் காட்சி பாதிவாகி இருந்தது. இதை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து சிசிடிவி பதிவுகளின்படி எழும்பூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் எழும்பூர் நீதிமன்ற உதவியாளர் விவேகானந்தனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மோசடியில் ஈடுபடும் வகையில் நீதிமன்ற முத்திரையை திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நீதிமன்ற ஊழியர் விவேகானந்தனை கைது செய்தனர். அவரிடம் இருந்து நீதிமன்ற முத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Egmore , Employee arrested for stealing 'seal' in Egmore court
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...