சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மண்டல தலைமை பெரியாளர்களுக்கும் மின்சார வாரியம் சுற்றைக்கை விடுத்துள்ளது. மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனே மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.